செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பதிலடி அல்ல என்றார்

கோவையில் கூட்டம்
ஜெயலலலிதா நடத்தி
இரண்டு லட்சம் பேரை
கூட்டினார் என்றது
ஊடகங்கள். மூன்றே மணி
நேரம், நகரை நிறுத்தினார்
இப்படி ஊடக ஒலிகள்
அய்யாவை அசைத்தது.
அய்யாவும் இறங்கினார்.
களத்தில் இறங்கி குஸ்தி
போட தயாரானார்.
அதே வ.உ சி. மைதானத்தில்
அதேபோல காட்சி உருவாக்க
ஏற்பாடு செய்தார். இது
அரசாங்கத்தில் இருக்கும்,
ஆளுங்கட்சியின் ஆட்டம்.
அதனால் அவ்வளவு தூரம்
மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
ஆனாலும் போட்டு அதன்மூலம்
தங்கள் உ.பி.க்களை உசிப்பி விட
தலைவர் விரும்பினார்.
ஆனாலும் அதை அப்படி நினைக்க
கூடாதென, இப்படி பேசினார்.
யாருக்கும் பதிலாக அல்லது
போட்டியாக இங்கே நாங்கள்
கூட்டம் போடவில்லை.
தந்தையும், மகனும், இதையே
பேசினர். அதனால்தான் மக்களுக்கு
அம்மா நினைவு தானாகவே வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக